[You must be registered and logged in to see this image.]தேவையானவை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு கால் கிலோ, குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி கால் கிலோ, முழு கருப்பு உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை 4 டீஸ்பூன், வெங்காயம், இஞ்சி, பூண்டு, முருங்கை கீரை, உப்பு, நல்லெண்ணெய் தேவையான அளவு. செய்முறை: கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும்.
காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் அரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி இருபுறம் சுட்டு எடுக்கவும். பலன்கள்: குதிரைவாலி, இதய நோய் உள்ளவர்களுக்கு நல்ல உணவாக இருக்கிறது.
கேழ்வரகில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது. சாமை, முதுகெலும்பு வலியைக் குறைக்கும். வரகு, உடல் பருமன், மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
உணவில் மாற்றம் உடல் சூட்டைக் குறைக்கும்!
மனித சரீரத்தை சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என மூன்று வகையாகப் பிரித்துள்ளார்கள். இதில், நீங்கள் பித்த உடம்புக்காரராக இருக்கலாம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் மட்டுமே உடல் சூடு தணிந்துவிடாது. அது ஒரு வழி மட்டுமே. உங்கள் தினசரி உணவுப் பழக்கவழக்கம் பற்றி எதுவும் தெரிவிக்க வில்லை. பொதுவாக உடல் சூட்டைத் தணிக்க உணவுப் பழக்கத்தில் மாற்றம் தேவை. புளிப்பு, கார்ப்புச் சுவைகளைத் தவிர்த்துவிட்டு இனிப்பு, துவர்ப்புச் சுவைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மோர், இளநீர், பழச்சாறு ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக்கொண்டால், உடல்சூடு தணியும். சின்ன வெங்காயம், வெள்ளரிக்காய், வெண்பூசணி, சுரைக்காய், வெண்டைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்க்க வேண்டும்.
தினந்தோறும் காலை, மாலை என இருவேளையும் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அரக்கு தைலம், சந்தனாதி தைலம் போன்ற சூடு தணிக்கும் தைலங்களைப் பயன்படுத்தினால், அதிக நன்மை கிடைக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது உச்சந்தலை, கட்டை விரல், தொப்புள் பகுதியில் எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டும்.
கறுப்பு நிற ஆடைகளைத் தவிர்த்து, வெள்ளை நிற அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிதல் நல்லது. மேலும், உங்கள் உடலுக்கான பிரத்யேகத் தீர்வைப் பெற உங்கள் அருகில் உள்ள சித்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.